இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிக்கு மொத்தம் 16 காலியிடங்களை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 27.07.2020 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேற்கப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
கல்வி தகுதி:-
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment