Monday, July 13, 2020

மனதை ரணமாக்கும் கவிதை

கருணை இல்லத்தில் 
வாழும் கண்ணீர் துளிகள்
 
காம சுகத்தில்
கால் விரித்தவளுக்குத்
தெரிந்திருக்கப் போவதில்லை
கால் நீட்ட வழியின்றி
மண்டியிட்டே நீ உறங்குவது......
முந்தானை அவிழ்த்து
மோகப் பாய் விரித்து
கட்டிப் புரண்டவளுக்கு
புரிந்துருக்க வாய்ப்பில்லை
படுக்க பாயின்றி
போர்த்த வழியின்றி நீ
அடைபட்டுக் கிடப்பது சிறு
அட்டைப் பெட்டிக்குள் என்று!!!
கச்சை கழட்டியவள்
நினைத்திருக்கவே மாட்டாள்
சட்டை இல்லாமல்
தெருத்தெருவாய் நீ
அலைவாய் என்று!!!
இச்சையில் பசியாறி
வயிறு நிரப்பியவள்
அறிந்திருக்க வாய்ப்பேயில்லை
எச்சை இலைக்கு நீ
கையேந்திக் காத்திருப்பது....
மலரென்று எண்ணாமல்
மலமென்று தூக்கிக் குப்பையில்
போட்டவளுக்கு
எப்படித் தெரியும்
இந்த மழலைகளின் சோகம்...
 
-துவாரகா கவிதா பாரதி
 

No comments:

Post a Comment

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...